தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது
கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு தங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. கடந்தாண்டை ஒப்பிடுகையில் தங்கத்தின் தேவை வெகு அளவு குறைந்துள்ளது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையில் 36 சதவீதம் வரையில் குறைந்து 101.9 டன்னாக உள்ளது. கொரோனாவினால் ஊரடங்கு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆபரண தங்கம், ஏனைய தங்க முதலீடு ஆகியவை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மீண்டும் தங்க வியாபார சங்கிலியை மறுசீரமைப்பு செய்யவேண்டும். இல்லையென்றால் இந்தாண்டு மிகவும் சவாலான ஆண்டாக மாறிவிடும் சூழல் உருவாகும்.
உலக தங்க கவுன்சில் (WGC) இந்திய நிர்வாக தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், ஆபரண தங்கத்தின் தேவையானது இந்த காலாண்டில் 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 47 ஆயிரம் கோடியாக இருந்த நிலை, இந்த காலாண்டில் 37,580 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பொருளாதாரத்தின் நிலையற்ற நிலை, பொருளாதார வீழ்ச்சி, ஊரடங்கு ஆகியவை ஆகும். ‘ என WGC இந்திய நிர்வாக தலைவர் சோமசுந்தரம் குறிப்பிட்டார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…