மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது?தீவிர ஆலோசனை ….

Published by
Venu

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்போது, எங்கு நடத்துவது, மாநாட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களை ஈர்க்க உருவாக்க வேண்டிய கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதியை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன…
கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து துறைகளின் அனுமதிகளை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றில் 61 திட்டங்கள் மூலம் ரூ.62,738 கோடிக்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதாகவும் இதன்மூலம் 76,777 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
Image result for உலக முதலீட்டாளர் மாநாடு
இந்நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்தனர். அப்போது முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் துறை அதிகாரிகள் கூட்டம் நேற்று காலை நடந்தது.
அதைத் தொடர்ந்து பிற்பகலில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீ்ர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், பி.பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்போது, எங்கு நடத்துவது, மாநாட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களை ஈர்க்க உருவாக்க வேண்டிய கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதியை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago