வணிகம்

ஐந்தாவது நாள் பங்குச்சந்தை முடிவு.! 600 புள்ளிக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.!

Published by
செந்தில்குமார்

இந்தியா பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்றன. அதன்படி, கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தில் கடந்த நான்கு நாட்களிலும் சரிவுடனே வர்த்தகமானது.

இந்த சரிவினால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். இதனை ஈடு செய்யும் விதமாக இன்றைய வர்த்தக நாள் ஆனது முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இன்றைய வர்த்தக நாளில் பிள்ளைகளுக்கு மட்டுமே உயர்ந்து வர்த்தகமாகி வந்தது.

இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகள் ஏற்றமடைந்தன. அதேபோல நிஃப்டி 19,000 புள்ளிகளை கடந்தது, தற்பொழுது ஐந்தாவது வர்த்தக நாள் ஆனது நிறைவடைந்துள்ள நிலையில், 63,559 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 634.65 புள்ளிகள் உயர்ந்து 63,782.80 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 190.00 புள்ளிகள் உயர்ந்து 19,047.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதோடு, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 264.90 புள்ளிகள் குறைந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.03 டாலர் விலை உயர்ந்து 89.96 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 143.00 அல்லது 2.06% உயர்ந்து ரூ.7,088 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் 30 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் உயர்ந்துள்ளன.

அதன்படி, ஆக்சிஸ் பேங்க், எச்சிஎல் டெக்னாலஜிஸ்,  டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளன ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago