மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 59,330 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி136 புள்ளிகள் அதிகரித்து 17,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், தற்போது இந்திய பங்குசந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…