வாரத்தின் முதல் நாளிலே ஏற்றம்..! சென்செக்ஸ் 61,963 புள்ளிகளாக நிறைவு..!

Sensex Rise

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்து 61,963 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,314 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

கடந்த வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நாளில் 61,579 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 234 புள்ளிகள் அல்லது 0.38% என உயர்ந்து 61,963 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 111 புள்ளிகள் அல்லது 0.61% சரிந்து 18,314 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,729 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,203 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

டெக் மஹிந்திரா, விப்ரோ லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்