வங்கி வேலைகள் இருந்த முடிச்சிவைச்சிக்குங்க…! வேலைநிறுத்தம் அறிவிப்பு ..!5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது …!

Default Image

வங்கிப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
ஊதிய உயர்வு,பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கங்கள் இருநாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளனர்.அதாவது நாளை (டிசம்பர் 21 ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளனர்.இதனால் நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
அதாவது நாளை வங்கி வேலை நாள் ஆகும்.அடுத்த நாட்களான சனி மற்றும் ஞாயிறு விடுமுறை ஆகும்.திங்கள் கிழமை வேலை நாள் ஆகும்.செவ்வாய் கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும்.இதனால்  வங்கிப் பணியாளர்கள் சங்கங்கள் இருநாட்களுக்கு (வெள்ளி மற்றும் திங்கள்)வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ள நிலையில் விடுமுறை நாட்களையும் சேர்த்து மொத்தம்  5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் இன்றுடன் வங்கி வேலைகளை முடித்து வைத்தால் நல்லது ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்