Gold [File Image]
கடந்த 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.44,480க்கு விற்பனை ஆன ஒரு சவரன் தங்கம், 10 நாட்களில் ரூ.1,160 உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.46,000-ஐ கடந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
(28.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770க்கும் விற்பனையாகிறது. ஆனால், விலையில் மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 77,500க்கும் விற்பனையாகிறது.
(27.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,705 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூ.77.50ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…