அமெரிக்காவில் நீரவ் மோடி இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த இயலாது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்த வழக்கில், வைரநகைத் தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல்சோக்சி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பெரிதாக உருவெடுப்பதற்கு முன்னரே, வெளிநாடு சென்றுவிட்ட நீரவ் மோடி, நியூயார்க்கில் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், நீரவ் மோடி அமெரிக்காவில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து தெரியும் என்றாலும், அதை உறுதிப்படுத்த முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நீரவ் மோடியை கண்டுபிடிக்க இந்திய அரசுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செய்யுமா என்ற கேள்விக்கு, இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறையை அணுகிக் கேட்குமாறு அந்த செய்தித்தொடர்பாளர் பதிலளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…