உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி திங்களன்று கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishthaa) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்திர பிரதேச மாநில அரசு வெகு பிரமாண்டமாக செய்து வருகிறது. இந்த விழாவுவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
நாளையும் திறக்கப்படும் பங்கு சந்தை… எவ்வளவு நேரம் தெரியுமா..?
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கூட அரைநாள் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதே போல மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை அரைநாள் விடுமுறை என அறிவித்துள்ளன.
தற்போது ரிசர்வ் வங்கியும் பங்குச்சந்தைக்கு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. வரும் திங்களன்று பங்குசந்தையானது பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும் என அறிவித்துள்ளது . வழக்கமாக காலை 9.30க்கு பங்குச்சந்தை துவங்கிவிடும்.
இதனை ஈடுகட்டும் விதத்தில் இன்று (சனிக்கிழமை) பங்குசந்தை இயங்குகிறது. ஆனால் இன்று காலை 9.30க்கு தொடங்கிய பங்குசந்தையானது பிற்பகல் 3.30 மணிக்கு வரை மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்று குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகள் அதாவது, நிலுவை பரிவர்த்தனைகள் இன்று நடைபெறாது என்றும் இந்த பரிவர்த்தனைகள் நாளை மறுநாள் 22ஆம் தேதி தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…