சுவிட்சர்லாந்தில் மறுதினம் நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். சர்வதேச பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை நடக்கிறது. 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாடு 5 நாட்கள் நடக்கிறது. 38 பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்கள், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி நாளை துவங்குகிறது. இதன்மூலம், சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் டாவோஸ் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
மேலும், இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட 6 அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். சர்வதேச அளவில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்பதால் இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நமக்கான நல்ல வாய்ப்பாக இம்மாநாடு அமையும். 125 கோடி மக்களின் குரலை மாநாட்டில் வெளிப்படுத்துவதுதான் எனது நோக்கம்’’ என்று தெரிவித்துள்ளார்
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…