விஜய் மல்லையா-அருண் ஜெட்லி இடையே ரகசிய ஒப்பந்தம்…!மல்லையா நாட்டைவிட்டு ஒட உதவி செய்தவர் அருண் ஜெட்லி …!திடுக் தகவலை கூறிய  ராகுல் காந்தி

Published by
Venu

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.

Image result for vijay mallya arun jaitley

மேலும் நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று விஜய் மல்லையா பரபரப்பு தகவல் தெரிவித்தார்.

இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், 2014 ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய் மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், விஜய் மல்லையா-மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இடையே உள்ள ரகசிய ஒப்பந்தம் தெளிவாகியுள்ளது. ஒரு குற்றவாளி நாட்டைவிட்டு ஒட, அமைச்சர் துணை போய் உள்ளார்.அருண் ஜெட்லியை சந்தித்த பின்னர்தான் விஜய் மல்லையா வெளிநாடு சென்றார். லண்டன் செல்வதாக ஜெட்லியிடம் மல்லையா தெரிவித்துள்ளார்.மேலும் விஜய் மல்லையா லண்டனுக்கு செல்லப் போவதாக கூறியிருந்தும் அந்த தகவலை சிபிஐ, அமலாக்கத்துறை அல்லது காவல்துறைக்கு ஏன் அருண்ஜேட்லி தெரிவிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago