நாளை முதல் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், ஏ.டி.எம். உள்பட பல்வேறு வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என கூறியதால், மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். அதன்படி, நாளை எஸ்.பி.ஐ. இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கியின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…