போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் புதுச்சேரியில் பணம் திருடிய வழக்கில் மேலும் மூவர் கைது!

Default Image

போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து புதுச்சேரியில்  வங்கிக் கணக்குகளிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்ட வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்திய புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார், போலி ஏ.டி.எம். அட்டைகளை தாயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக புதுச்சேரியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பாலாஜி, ஜெயச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த ஷ்யாம், கடலூரைச் சேர்ந்த கமல், புதுச்சேரி மருத்துவர் விவேக் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளுக்கு உதவியதாக சிவக்குமார், கணேஷ், டேனியல் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்