பணத்தட்டுப்பாட்டை போக்க புதிய வழி!இனி இப்படி பணம் எடுத்தால் கட்டணம் கிடையாது !

Published by
Venu

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜ்னிஷ் குமார் ,நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு, இன்றைக்குள் முழுமையாக சீரடையும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில் பீகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட திடீர் ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக, பணப்பற்றாக்குறைக்கு ஏற்ப பகுதிகளுக்கு அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைத்திருப்பதாகவும், தற்போது நாடு முழுவதும் 86 சதவிகித ஏடிஎம்-கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் ரஜ்னிஷ் குமார் குறிப்பிட்டார். இன்று இரவுக்குள் நாடு முழுவதும் நிலைமை சீரடைந்து விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே SBI தலைமை செயல் அதிகாரியான நீரஜ் வியாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள தகவலில், Swipe Machine-கள் மூலம் கட்டணமின்றி பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி, முதல் மற்றும் 2–வது தர நகரங்களில் சில்லரை விற்பனை நிறுவனங்களில் உள்ள Swipe Machine-களில் SBI மற்றும் பிற வங்கிகளின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிறிய நகரங்களில் உள்ள Swipe மெஷின்களில், எந்தவித கட்டணமும் இன்றி, 2 ஆயிரம் ரூபாயும் எடுத்துக் கொள்ளலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இதனிடையே, கரன்சி தட்டுப்பாட்டைப் போக்க, 500 மற்றும், 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி, முழுவீச்சில் நடப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்யூரிட்டி பிரின்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான 4 அச்சகங்களில் புதிய 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி இரவு பகலாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago