இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப RTGS மற்றும் NEFT என்ற ரிசர்வ் வங்கி முறையைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அதிலும்,RTGS மூலம் பணத்தை அனுப்பும்போது அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு உடனே சென்றுவிடும்.ஆனால், NEFT மூலம் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கணக்கில் பணம் ஏறும்.இக்காரணத்தினால் அதிக அளவு மக்கள் RTGSயை பயன்படுத்துகின்றனர்.
எனினும், RTGS மூலம் குறைந்தபட்சமாக ரூ. 2 லட்சம் வரையிலான பணத்தை மட்டுமே அனுப்ப இயலும்,ஆனால் NEFT மூலம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அனுப்ப முடியும்.மேலும்,NEFT மூலமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை, நாள் ஒன்றுக்கு 9 கட்டங்களாக மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்த நிலையில்,இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி,நாளை 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.ஏனெனில்,தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், நாளை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணப் பரிவர்த்தனை நடைபெறாது என்றும் அதே சமயம் NEFT முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…