நாளை பந்த்தின் போது பேருந்துகள் ஓடினால் கல்வீசி உடைப்போம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.
இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.
அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை நாடு முழுவது பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியில் இன்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி(காங்கிரஸ் )தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நாளை பந்த்தின் போது பேருந்துகள் ஓடினால் கல்வீசி உடைப்போம் என்று ஆவேசமாக தெரிவித்தனர்.அதுவும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசமாக பேசியுள்ளனர்.இந்த பேச்சு காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.காரணம் என்னவென்றால் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…