நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு …! பேருந்துகள் ஓடினால் கல்வீசி உடைப்போம் …!தமிழ் பேசும் முதலமைச்சர் முன்னே காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசம் ..!

Default Image

நாளை பந்த்தின் போது பேருந்துகள் ஓடினால் கல்வீசி உடைப்போம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.

Image result for bharat bandh

இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.

அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

Image result for bharat bandh

இந்நிலையில் நாளை நாடு முழுவது பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியில் இன்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி(காங்கிரஸ் )தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நாளை பந்த்தின் போது பேருந்துகள் ஓடினால் கல்வீசி உடைப்போம் என்று ஆவேசமாக தெரிவித்தனர்.அதுவும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசமாக பேசியுள்ளனர்.இந்த பேச்சு காங்கிரஸ் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.காரணம் என்னவென்றால் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்