விளைச்சல் அதிகரித்துள்ளதான் காரணமாக, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 3 ரூபாய் வரை சரிந்துள்ளது.
பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொப்பிடி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, பேகாரஅள்ளி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தக்காளி விலை அதிகம் இருந்ததால், நடப்பு ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டிருந்தனர். அத்துடன் நல்ல மழையும் பொழிந்ததால் தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது.
இதன்காரணமாக, மார்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய்க்கும், 15 கிலோ கொண்ட ஒரு கூடை 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் தமிழகத்தின் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலும், தக்காளி விலை கிலோ ஒன்றிற்கு 5 ரூபாயாக சரிந்துள்ளது. இதேநிலை நீடித்தால் பெரும் நஷ்டம் அடைவது மட்டுமின்றி, தக்காளியை சாலையில் கொட்டும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
source: dinasuvadu.com
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…