உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது!நிதியமைச்சர் அருண் ஜெட்லி

Published by
Venu

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ,உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது என்று கூறியுள்ளார்.

கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் எடுக்கச் செல்லும் ஏ.டி.எம்களில் எல்லாம் இல்லை என்ற பதிலே கிடைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்தில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பணம் இருக்கும் ஒரு சில ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகவும் அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் கடந்த 15 நாட்களாக ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதாக அங்குள்ளவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பணத்தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள விவகாரத்தில் பெரும் சதி உள்ளது என்றார்.

இதனிடையே பணத்தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதித்துறை அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது ரூபாய் நோட்டுகளை தேவைக்கு அதிகமாக வைத்துள்ள வங்கிகள், தட்டுப்பாடு நிலவும் வங்கிகளுக்கு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விடுத்துள்ள செய்தி குறிப்பில், நாட்டில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள பணத்தேவையால் ஒரு சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசின் கையில் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் இருப்பில் இருப்பதால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பொருளாதார விவாகரத்துறை செயலாளர் சுபாஸ் சந்திர கார்க், தற்போது நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாகவும், இதனை 5 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , இதனால் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்றும் கூறியுள்ளார்.

பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கிகள் சங்கத்தினர், கர்நாடக வங்கிகளுக்கு அதிகமாக பணம் விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், அங்கு வழக்கத்திற்கு மாறாக முதலீட்டை விட பணத்தை எடுப்பது அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனிடையே சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இருந்து தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 1100 கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

24 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago