இனி ஓவர்டைம் பணி செய்தால் ஊதியம் கிடையாது!ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மத்திய அரசு!

Published by
Venu

மத்திய அரசு  ‘ஓவர்டைம்’ பணி செய்தால் வழங்கப்படும் ஊதியத்தை  ஊழியர்களுக்கு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

ஆனால் இயந்திரங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்டோருக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் பயிற்சித்துறையும், மத்திய செலவுத்துறையும் விளக்கம் அளித்துள்ளது. அதில், 7-வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்துள்ளது, இதில் மத்தியஅரசு ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், மத்திய அரசின் தொழிற்பிரிவு, இயந்திரங்களில் பணியாற்றுவோரில் தவிர அனைத்து ஊழியர்களுக்கும் ஓவர்டைம் பணியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், துறைகளிலும் இந்த முடிவை  செயல்படுத்தவும், இந்தத் துறைகளுக்கு கீழ் உள்ள பிரிவுகளிலும் கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்கள், துறைகளிலும் ஆப்ரேஷனல் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களைப் பட்டியலிட்டு அவர்களைக் கணக்கெடுத்து, அவர்களை பயோ-மெட்ரிக் வருகை பதிவோடு இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு உத்தரப்படி  ஆப்ரேஷனல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓவர்டைம் பணிக்கான ஊதியம் வழங்கப்படும் அந்த ஊதியம் மறு ஆய்வு செய்யப்படவில்லை.

அதேசமயம், மத்திய அரசு ஊழியர்கள் ஓவர்டைம் பணியை அவர்களின் துறைரீதியான மூத்த அதிகாரிகள் எழுத்துப்பூர்வ உத்தரவின் அடிப்படையில், அவசரக்காலம் கருதி செய்தால் அதற்குச் சம்பளம் வழங்கப்படும் என்று  அந்த  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago