வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து 69ரூபாய் என்கிற நிலைக்கு சென்றது.
அமெரிக்க டாலரை வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அதிகமாக வாங்கி வருகின்றனர். பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிக அளவில் வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில் ரூபாய் மதிப்பு இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே 28காசுகள் வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 68ரூபாய் 89காசுகளாக குறைந்தது. அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் மதிப்பு மேலும் 21காசுகள் வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற அளவைத் தாண்டியது. மொத்தத்தில் இன்று ஒரேநாளில் 49காசுகள் சரிந்து 69ரூபாய் 10காசுகளாக இந்திய ரூபாயின் மதிப்பு இருந்தது. இதற்கு முன் ரூபாய் மதிப்பு 2016நவம்பர் 24ஆம் நாள் 68ரூபாய் 73காசுகளாக இருந்ததே மிகக் குறைந்த அளவாக இருந்தது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்துக்கும் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் எனப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…