அருண் ஜெட்லி அதிரடி : மத்திய அமைச்சரவையின் புதிய சட்டம் !

Published by
Dinasuvadu desk
மத்திய அமைச்சரவையின் புதிய சட்டம் : பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய மத்திய அமைச்சரவை கூடத்தில், வங்கி மோசடி, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருத்தல் போன்ற பொருளாதார குற்றங்கள் செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய மசோதாவுக்கு  இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவுக்கு, “தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.100 கோடிக்கு அதிகமாக வங்கி மோசடி, கடன் மோசடி செய்து தப்பித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவற்றை ஏலமிட்டு கடனை செலுத்த முடியும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த மசோதா குறித்து  டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

ரூ.100 கோடிக்கு அதிகமாக மோசடி செய்து, வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும நோக்கில் தலைமறைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த மசோதா வரும் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். பொருளாதார குற்றம் செய்து தப்பித்தவர்கள், நீதிமன்ற கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள், விசாரணையை எதிர்கொள்ள பயந்து வெளிநாடுகளில் இருப்பவர்கள், கிரிமினல் விசாரணைய எதிர்கொள்ள முடியாதவர்கள் ஆகியோருக்கு எதிராக இந்த சட்டம் பாயும்.

இதற்கு முன் கொண்டுவரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தைக்காட்டிலும் இது வித்தியாசமானதாகும். இந்த சட்டத்தில் பொருளாதார குற்றம் செய்து தலைமறைவாகஇருந்தால், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும்.

பொருளாதார குற்றம் செய்து தப்பித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது கூறியிருந்தோம் அதை இப்போது செயல்படுத்தியுள்ளோம்.

இந்த சட்டம் ஏற்கனவே குற்றம் புரிந்தவர்கள் மீதும், பயன்படுத்தப்படும், வழக்கு நடந்துபவர்கள் மீதும் பாயும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

18 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

21 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

53 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago