அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அம்மாநிலத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்த சலுகையும் இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பள்ளி ஊழியர்கள் உள்பட மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 18 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படும் நிலையில், சரியாக திட்டமிட்டு செயல்படுவற்காக முன்கூட்டியே அறிவித்ததாக மம்தா விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…