வரும் 31 ஆம் தேதிக்கு மேல் பாரத ஸ்டேட் வங்கியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் பாரத பெண்கள் வங்கியின் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல துணை வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கிக்கு செயல்பட்டு வந்தன.ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி,திருவாங்கூர் உள்ளிட்ட பல வங்கிகளும் பாரத பெண்கள் வங்கியும் கடந்த வருடம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து இணைக்கப்பட்ட வங்கிகளின் பெயரும் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்தி அந்த வங்கிகளில் ஐ எஃப் எஸ் சி குறியீட்டு எண்களும் மாற்றப்பட்டன.
பெயர் மாற்றம் மற்றும் ஐ எஃப் எஸ் சி குறியீட்டு எண் மாற்றம் காரணமாக புதிய காசோலை புத்தகங்களை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும் படி வாடிக்கையாளர்களை வங்கி கேட்டுக் கொண்டது. பெரும்பாலான வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அது இந்த வருடம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி தற்போது இந்த மாதம் 31 ஆம் தேதிக்குப் பின் பழைய காசோலைகள் செல்லாது என அறிவித்துள்ளது. இதுவரை புதிய காசோலை புத்தகங்கள் வாங்காதவர்கள் அதை இணைய தளம், ஏடிஎம் கள் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என வங்கி அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…