மக்கள் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி!

சீனாவை தொடர்ந்து, கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதன் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மிக கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனையடுத்து, காஞ்சிப்புரம் மாவட்டம், நீலாங்கரையில், தங்கள் உயிரை பொருட்படுத்தாது, பிறர் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. உணவு வாங்கியவர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.