#Breaking:இல்லத்தரசிகளுக்கு ஷாக்…வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு!

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,மார்ச் 1 ஆம் தேதியன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.50 உயர்வு:

இந்நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967 அதிகரித்துள்ளது.அதன்படி,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து,ரூ.967.50 விற்பனை செய்யப்படுகின்றது.

அதிர்ச்சி:

நான்கரை மாதத்திற்கு பிறகு இன்று பெட்ரோல்,டீசல் விலை 76 காசுகள் அதிகரித்த நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.முன்னதாக ரூ.917 ஆக நீடித்து வந்த வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.இது,இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.