#BREAKING : அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு…! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு..!

2 மணிநேர வேலை நேர குறைப்பால் புதுவைப் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஆளுநர் தமிழிசை பேட்டி.

புதுவையில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஆளுநர் தமிழிசை பேட்டி 

இந்த அறிவிப்பின் படி,  அரசு பெண் ஊழியர்கள், வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த வேலை நேர குறைப்பால் புதுவைப் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இதன் மூலம் பெண்கள் ஆக்கபூர்வமாகவும், ஊக்கத்துடனும் பெண்கள் பணியாற்றுவார்கள். தற்போது அரசுத்துறை பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இதை பார்த்து தனியார்துறையும் பின்பற்றும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.