30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

#Breaking : விஷச்சாராய வழக்கு – விசாரணை அதிகாரிகள் நியமனம்..!

விழுப்புரம், செங்கல்பட்டு விஷசாராய வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து 22 பேர் மரணமடைய காரணமான விஷச்சாராயம் விற்பனை செய்த ஆலை அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா, ஏழுமலை மற்றும் 13 பேர் மீதான வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு விஷசாராய வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்குகள் சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எக்கியார்  குப்பத்தில் 14 பேர் இறந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சித்தாமூரில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். விஷசாராய தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் இன்று தொடங்குகின்றனர்.