#BREAKING: போர்பதற்றம் எதிரொலி – விமான சேவை ரத்து..!

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் இன்று  தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.

இதற்கிடையில் இஸ்ரேல் அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் போர் எதிரொலியாக டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்-விற்கு பயணிகளின் நலன் கருதி விமான சேவை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

author avatar
murugan