#BREAKING : குஷியில் மாணவர்கள் – 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி..!

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.