சென்னை: குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே தான் தற்போதைய அரசுக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். புற்றுநோயை உருவாக்கும் புகையிலைப் பொருட்களை விற்க விஜயபாஸ்கர் மாமுல் பெற்றுள்ளார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .