மும்பையில் இருக்கும் பந்த்ரா ரயில் நிலையம் அருகே திடீர் தீ விபத்து.

Related image


பரபரப்பாக இருக்கும் மும்பை பந்த்ரா ரயில் நிலையம் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது,இச்சம்பவம் அப்பகுதியில் இருக்கும் மக்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பந்த்ரா ரயில் நிலையம் அருகேயுள்ள பேரம்படா குடிசைப் பகுதி சரியாக, மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த விபத்தில், பேரம்படா பகுதியில் இருந்த ஏராளமான குடிசைகள் எரிந்து போனது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், 16 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் பந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது
author avatar
Dinasuvadu desk

Leave a Comment