ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்…!

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரில் காவல்நிலையம், ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலால் பதற்றம் நிலவுகிறது. சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் போலீசும், ராணுமும் இணைந்து முகாம் அமைத்துள்ளது. இங்கு அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் முகாம் மீது சரமாரியாக சுட்டதில் 2 வீரர்கள் காயமடைந்தனர். குல்கா மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதல் நிகழ்ந்த இடங்களுக்கு கூடுதல் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். 

Leave a Comment