திருச்செந்தூர் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் தவறி விழுந்த பைக் ஓட்டுனர்..!

தூத்துக்குடி:திருச்செந்தூர்- வீரபாண்டியன்பட்டணம் சாலையில் உள்ள சின்ன பாலத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் தடுப்பு சுவர் இல்லாத நிலை தொடர்து இருந்து வருகிறது.இதனை தொடர்ச்சியான முறையில் திருச்செந்தூர் RDO கவனத்திற்கு வந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை. இதனால்  திருச்செந்தூர் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்,அந்த பாலத்தின் வழியே பயணிக்கும் பொது தவறுதலாக ஓடையின் உள்ளே தனது இரு சக்கர வாகனத்துடன் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளானார்.இனிமேலாவது சம்பந்தபட்ட சாலை போக்குவரத்து துறை விழித்து காெண்டு மக்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்குமா..?

author avatar
Castro Murugan

Leave a Comment