சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் பூஜை நேரம் மாற்றம்..!

     சந்திர கிரகணம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 10:50 மணி முதல் நள்ளிரவு 12:44 மணி வரை நடக்கிறது. எனவே கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 05:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 05:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 04:00 மணிக்கு சாயரக்ஷை தீப ஆராதனை, 05:00 மணிக்கு தங்கரதம் புறப்பாடு, ராக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இரவு 08:00 மணிக்கு பள்ளியறை தீப ஆராதனையும், அதைத்தொடர்ந்து நடை திருக்காப்பிடுதலும் நடைபெறுகிறது. பின்பு இரவு 09:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 09:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது, பின்னர் சுவாமி மீது பட்டு சத்தப்பட்டு நடை திருக்காப்பிடப்படுகிறது. பின்னர் அதிகாலை 03:00 மணிக்கு புண்ணியாகவாசனம், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்றகால பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் என திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி தெரிவித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment