புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி பரோல் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மகள் ஹரித்ரா திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதம் பரோலில் தர கோரி நளினி வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். பரோலில் விடுவிக்க கோரும் நளினியின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது