ஹரியானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி …!!

ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவின் கிருஷ்ணன் மிதா வெற்றிபெற்றுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் தொகுதி M.L.A  வேட்பாளர் இந்திய தேசிய லோக் தளத்தின் ஹரி சந்த் மிதா உயிரிழந்தார்.இந்நிலையில் இந்த தொகுதிக்கு கடந்த திங்களன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக கிருஷ்ணன் மிதா_வும் , காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா வேட்பாளராக இறங்கினர்.

இந்நிலையில் இந்த தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் முடிவு இன்று வெளியானது.இதில் தொடக்க முதலே பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.இறுதியாக பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கிருஷ்ணன் மிதா வெற்றி பெற்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment