ஃவோக்ஸ்வேகன் போலோ காரைப்போல ஃவோக்ஸ்வேகன் அமியோ காரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், அதிக சிறப்பம்சங்களுடன ் புதிய வேரியண்ட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
பழைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட இந்த புதிய 1.0 லிட்டர் எஞ்சினின் பவர் வெளிப்படுத்தும் 1 பிஎஸ் குறைவாக இருக்கிறது. அதேபோன்று, 15 என்எம் டார்க் திறனும் குறைவு. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். காம்பேக்ட் செடான் ரக கார் மார்க்கெட்டில் மிகவும் குறைவான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடலாக மாறிவிட்டது அமியோ.
எஞ்சின் மட்டும்தான் மாற்றப்பட்டு இருக்கிறது. மற்றபடி, வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. பழைய வேரியண்ட்டுகளும், வசதிகளும் அப்படியே தொடர்கிறது. ஃவோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் மாடல் டிரென்ட்லைன், கம்போர்ட்லைன், கம்போர்ட்லைன் ப்ளஸ், ஹைலைன் மற்றும் ஹைலைன் ப்ளஸ் ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
விலையில் மாற்றம் இல்லை. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7.45 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் விற்பனை செய்யப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கார்கள் டீலர்களில் இருப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அண்மையில் போலோ காரில் அறிமுகம் செய்யப்ப்பட்ட பேஸ் என்ற புதிய வேரியண்ட் இப்போது ஃவோக்ஸ்வேகன் அமியோ காரிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.6.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…