சூடு பிடிக்க துவங்கியது மாருதி சுசூகி…!!!! முன்பதிவுகள் தொடங்கியது…!!!! சகல வசதிகளுடன் சாலையில் பயணிக்கலாம்…!!!!!

Published by
Kaliraj
இந்தியாவில் மிகவும் பிரசதி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியது.இந்நிலையில் 2019 வேகன்ஆர் கார் முன்பதிவு செய்ய ரூ.11,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆர் மாடல் 2019, ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் வேகன்ஆர் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் சமீபத்தில் வலைதளத்தில் வெளியாகி இருந்தன.
அதன்படி காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது.
வேகன்ஆர் மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது.
தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது.புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை எஎம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி வேகன் ஆர் விலை ரூ.4-5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் தவிர மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் கார் 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இதனால் இந்த செய்தி வாகன பிரியர்களுக்கு வரபிரசாதமாக கருதுகின்றனர்.
DINASUVADU.
Published by
Kaliraj

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

1 hour ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

2 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

3 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago