டிரஸ்ட் அட்வைசரி அமைப்பின் பட்டியல்: எந்த காருக்கு முதலிடம்..?

Published by
Dinasuvadu desk

 

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் பயன்படும்  கார் பிராண்டுகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், டாடா, ஹோண்டா, மாருதி, பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் முன்னிலை பெற்றிருக்கின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் முன்னிலை பெற்றிருக்கும் கார் நிறுவனங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆட்டோமொபைல் பிரிவில் ஹோண்டா கார் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த நிறுவனங்களின் பொதுப் பிரிவு பட்டியலில் 7வது இடத்தை ஹோண்டா கார் நிறுவனம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பிரிவில் 6வது இடத்தில் இருந்த ஹோண்டா கார் நிறுவனம் இந்த ஆண்டு ஒரு இடம் சறுக்கி 7வது இடத்தில் இருக்கிறது. எனினும், ஆட்டோமொபைல் பிரிவு என்று வரும்போது தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் மாருதி கார் நிறுவனம் உள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்த நிறுவனங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த மாருதி நிறுவனம் இந்த ஆண்டு 3 இடங்கள் சறுக்கி 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு 45 வது இடத்தில் இருந்த பிஎம்டபிள்யூ 30 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 15வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. சொகுசு கார் பிரிவில் பிஎம்டபிள்யூ முதலிடத்தை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் உள்ளடக்கிய டாடா குழுமம் 4வது இடத்தில் இருக்கிறது.

இருசக்கர வாகனப்பிரிவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம் இந்த ஆண்டு 16வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், இருசக்கர வாகனப் பிரிவில் பஜாஜ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும் 16 நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

9,000 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,000 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்த 1,000 நிறுவனங்இந்த பட்டியல் 15,000 மணி நேர மனித உழைப்பில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக டிரஸ்ட் அட்வைசரி அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

6 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

8 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

8 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

10 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

11 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

11 hours ago