அம்பானி தன் சொந்த செவிலேயே வாங்கியதா இது..?அப்படி என்ன விசேஷம் அதுல இருக்கு.?

Published by
Dinasuvadu desk

 

ரிலையன்ஸ் நிறுவனத்தின்  முகேஷ் அம்பானி பற்றி நமக்கு தெரியும். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர், கடந்த 2014ம் ஆண்டு அவரது மொத்த சொத்துக்களின் இந்திய மதிப்பு படி 47 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.

அவரிடம் பிஎம்டபிள்யூ 760 எல்ஐ செக்யூரிட்டி, மற்றம் மெர்சிடியஸ் பென்ஸ் எஸ் கார்டு ஆகிய கார்கள் இருக்கின்றன. இந்த இரண்டு காரும் வாங்கிய பின்பு சிறிது கஸ்டமைஸ்டு செய்யப்பட்டது. இந்த ஒவ்வொரு காரும் சுமார் ரூ 15 கோடி மதிப்பாகும்.

இந்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது முகேஷ் அம்பானிக்கு. இந்நிலையில் அவர் தற்போது தனது பாதுகாவர்களுக்காக இரண்டு பைக்குகளை வாங்கியுள்ளார். ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கியுள்ள அவர் அதில் மாடிபிகேஷன் செய்ய வழங்கியுள்ளார். மாடிபிகேஷன் செய்யும் இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இனணயதளத்தில் வெளியானது.

இந்த பைக் முழுவதும் போலீஸ் பைக் போன்று மாற்றப்பட்டுள்ளது. முன் பக்கம் பெரிய விண்ட் சீல்டு, இரண்டு பக்கமும் பெட்டிகள், பின் பக்கம் வயர்லெஸ் இணைப்பிற்கான வசதி, பைக் முழுவதும் வெள்ளை கலர் பெயிண்ட், முன் பக்கத்திலும் பக்கவாட்டிலும் ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்கள், போலீஸ் வாகனத்திற்கு என ஸ்பெஷலாக பொறுத்தப்படும் லைட்டுகள் என மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனத்தை அம்பானி அவர் சொந்த செவிலேயே வாங்கி தனது பாதுகாவலர்களுக்கு வழங்குகிறார்.

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

1 hour ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

2 hours ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

3 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago