llr - licence [file image]
பழகுநர் – ஓட்டுநர் உரிமம் : மக்களே RTO ஆபிஸுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே எப்படி லைசன்ஸுக்கான பழகுநர் உரிமம் (LLR) எப்படி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க…
நாடு முழுவதும் ஒவ்வொரு ஓட்டுனரும் தங்களுக்கென ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். 18 வயது பிறந்ததும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதை எட்டிவிட்டீர்கள் என்றே சொல்லலாம். ஆனால், நம்மில் பலரிடம் இங்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருக்கும். இதனால், ஒவ்வொரு சிக்னல்களிலும் பயந்து கொண்டே பயணிக்க வேண்டியதாயிற்று.
இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை, RTO ஆபிஸுக்கு அலையாமல், வீட்டில் இருந்தபடியே பழகுநர் – ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஆம், அது எப்படி என்றால், ஆன்லைன் மூலமாக அதனை நாம் பெற முடியும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டிரைவிங் லைசன்ஸ் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இரண்டு முறைகள் உள்ளது.
அத்துப்படி, ஒன்று LLR மற்றொன்று Driving Test ஆகும், முதலில் LLR பெற்று கொண்டால், பின்னர் 3 மாத கால அவகாசத்திற்கு பின், Driving Test முடிந்தவுடன் நமக்கு லைசன்ஸ் (ஓட்டுநர் உரிமம்) கிடைத்து விடும். ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கான முதற்படியே எல்எல்ஆர் என்று கூறப்படும் பழகுநர் உரிமம் பெறுவதுதான்.
பழகுநர் உரிமம் பெறுவதற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://parivahan.gov.in/parivahan/ அல்லது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இணையதளமான https://tnsta.gov.in/tnsta/homepage என்கிற இணையதளத்தில் நாம் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
இருசக்கர வாகனம் அல்லது காருக்கு ஏதேனும் ஒன்றிக்கு ரூ.60 கட்டணமாகவும், இரண்டும் சேர்த்து எடுக்கும்போது ரூ.90 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…