காரில் ஓவர்லோடு ஏற்றுபவரா நீங்கள்..? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ..?

Published by
Dinasuvadu desk

 

சிலர் கார்களில் ஓவர்லோடுகளை ஏற்றி வருகின்றனர். கார்களில் மட்டுமில்லாமல் லாரி, லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ என எல்லா வாகனங்களிலும் இந்த கூத்து நடந்து தான் வருகிறது. லாரியை விட இரண்டு மடங்கு வைக்கோல் வைக்கப்பட்டுள்ள அகலம் அதிகமாக இருக்கும் இந்த லாரி ஒரு ரோட்டில் போனால் எதிரில் வருபவர்களும், இவர்களுக்கு பின்னால் வருபவர்களும் இவர்களை தாண்டி செல்வது கடினம் தான். இவ்வாறாக ஓவர் லோடு ஏற்றுவது சட்டப்படி தவறு தான்.

உங்கள் கார் அதிக சிசி, அதிக பவர்/டார்க் திறன் கொண்டது என எண்ணி அதில் அதிக பாாரத்தை ஏற்றாதீர்கள். நீங்கள் பெரிய கார் வைத்திருந்தாலும் சாரி சாதாரண ஆட்டோ வைத்திருந்தாலும் சரி அதற்கான அளவை தாண்டி பொருள் ஏற்றும் போது எந்த வாகனமும் அதை தாங்காது.

இதனால் நீங்கள் தேவைக்கு அதிகமாக ஆக்ஸிரேஷன் கொடுக்க வேண்டியது வரும். இதனால் அதிக பெட்ரோல் செலவாவதோடு இன்ஜினின் வாழ்நாளும் குறையும். அதே நேரத்தில் நீங்கள் பிரேக் பிடிக்கும் போதும் அதிக அழுத்தம் தேவைப்படும் இதனால் பிரேகிலும் கோளாறுகள் ஏற்படலாம். சில சமயம் பிரேக் பெயிலியர் ஆக கூட வாய்ப்புள்ளது.

உங்கள் காரின் சஸ்பென்சன் என்பது உங்கள் காரில் ஏற்றுவதற்கான அதிக பட்ச எடையை கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும் அப்படி இருக்கையில் நீங்கள் அதிக பாரத்தை ஏற்றினால் சஸ்பென்சன் சரியாக வேலை செய்யாமல்போகும்.

காரில் நீங்கள் அதிக பாரத்தை ஏற்றும் போது அதன் சமநிலையாக இருக்கும் என்பதை நீங்கள் கூற முடியாது. ஒருபுறம் எடை அதிகமாக இருந்து மறுபுறம் குறைவாகஇருந்தால் எடை அதிகமாக இருக்கும் பகுதியில் டயர் ஒரு பக்கமாக அழுத்தம் பெரும் இதனால் டயரின் ஒரு பகுதி மற்றமு் அதிக தேய்மானத்திற்குள்ளாகும்.

காரை திருப்புகையில் ஒரு பக்கமாக கார் இழுக்கும். இதனால் விபத்து கூட ஏற்படலாம். பராமரிப்பு செலவு அதிகரிக்கும் உங்கள் காரில் உள்ள அனைத்து பாகங்களும் காரில் ஏற்றக்கூடிய அதிகபட்ச எடையை கணக்கில் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கும்.

இன்சூரன்ஸ் கிடைக்காது ஒருவேலை நீங்கள் காரில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் போது கார் விபத்தில் சிக்கினால் நீங்கள் காருக்காக இன்சூரன்ஸ் செய்திருந்தாலும். இந்நிறுவனம் காரில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றியதை கூறி உங்களுக்கான இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுக்கும். இதனால் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு நீங்கள் காரில் அதிக பாரம் ஏற்றுவதை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட அளவுடைய பாரத்தை மட்டுமே ஏற்றி பயணம் செய்ய வேண்டும்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago