மேலும் இந்த மாடலின் புகைப்படங்களையும் தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் சற்று தெளிவாக காணலாம். இருசக்கர வாகன விற்பனையில் மாஸ் காட்டும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்க்கனவே வெளிவந்த தண்டர்பேர்டு 500 எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள காவி நிறத்தை அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலுக்கு அளிக்கவுள்ளது.ஏற்கனவே வந்த தண்டர்பேர்டு 500எக்ஸ் என்ற மாடலின் தயாரிப்பை இந்நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் உற்பத்தியை நிறுத்த உள்ளது, எனவே இந்த மாடலின் நிறத்தை அப்படியே தண்டர்பேர்டு 350எக்ஸ் பிஎஸ்6 என்ற புதிய மாடலுக்கு கொடுக்கப்பட உள்ளது.
இந்த புதிய காவி மாடல் வாகனத்தில் 346சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினுடன் விற்பனையாகி வருகின்ற இந்த தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற இந்த மாடல் 5,250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல் வாகனம் 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.மேலும் இந்தமாடல் வாகனம் பிஎஸ்6 தரத்திற்கு தற்போது அப்டேட் செய்யப்படவுள்ளதால் இந்த மாடல் வாகன என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்படவுள்ளது. இந்த மாடலில் 350சிசி மற்றும் 500சிசி வாகனமான இதில் டிஸ்க் ப்ரேக், கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் சில காஸ்மெட்டிக் பாகங்களின் ஒரு சில வேறுபாட்டுடன் அறிமுகமாகியது.
இத்தகைய வசதிகள் நிறைந்த இந்த வாகனம் ப்ரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்களிடையே இந்த மாடல் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 500சிசி திறனுடன் விற்பனையாகி வரும் புல்லட், தண்டர்பேர்டு மற்றும் கிளாசிக் ஆகிய மாடல்களின் தயாரிப்பு அடுத்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாக , இந்தியா முழுவதும் அமலாக உள்ள புதிய மாசு உமிழ்வு விதி தான் என்கின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…