மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்ட புதிய திட்டம் வகுக்கும் ஆடி கார் நிறுவனம்

Published by
Dinasuvadu desk

 

இந்தியாவில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைவான விலை சொகுசு கார்களை அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, தனது ஏ3 செடான் கார் மற்றும் க்யூ3 எஸ்யூவி மாடல்களைவிட குறைவான விலை காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க போவதாக தெரிவித்துள்ளது. தற்போது கைவசம் உள்ள க்யூ2 க்ராஸ்ஓவர் மாடல் இந்திய மார்க்கெட்டிற்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது.

வடிவமைப்பில் மிக ஸ்டைலான இந்த கார் ஆடி கார் பிரியர்களை மட்டுமின்றி, சொகுசு கார் பிரியர்களையும், முதல்முறையாக சொகுசு கார் வாங்க திட்டம் போடுபவர்களையும் எளிதாக வளைத்து போட்டுவிடும்.

இதன் உட்புறத் தோற்றம் மிக பிரிமியமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், விர்ச்சுவல் காக்பிட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத காராக இருக்கும். இந்த கார் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பெட்ரோல் மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 7 ஸ்பீடு எஸ்-டிரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, புதிய ஆடி க்யூ2 காரை ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விற்பனையை கணிசமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, நம்பர்-1 இடத்தை பிடிக்க வழியும் கிடைக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறது ஆடி. ஆடி க்யூ2 காரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம் போட்டுள்ளது.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

10 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

10 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

10 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

11 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

11 hours ago