ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சூப்பர் ஆஃபர்.. பழசை கொடுத்து புதுசு வாங்கிக்கோங்க…

Published by
மணிகண்டன்

Ather : பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கு இணையாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது தற்போது அதிகரித்து உள்ளது. அதற்கேற்றாற் போல, எலெக்ட்ரிக் வாகனங்களும் புது புது மாடலை களமிறக்கி வாகன பிரியர்களை கவர்ந்து வருகின்றன

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் விற்பனையில் முதன்மையாக இருக்கும் ஏத்தர் நிறுவனம் தற்போது வாடிக்கையாளரை கவரும் வண்ணம் புதிய எக்சேஞ்ச் ஆஃபரை அறிவித்துள்ளது. ஆனால் அதனை குறிப்பிட்ட மாடல் வைத்து இருக்கும் நபர்களுக்கு மட்டுமே என கட்டுப்பாடும் விதித்துள்ளது.

Read More – பாதுகாப்பு குளறுபடி… தாய்லாந்து நிறுவனம் தான் காரணம்.! பைக்குகளை திரும்ப பெரும்  Triumph.!

அதாவது கடந்த ஜனவரி 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஏத்தர்  ஸ்கூட்டர் அப்கிரேட் எனும் திட்டத்தில் பதிவு செய்து கொண்ட Ather 450 Gen 1 மற்றும் Gen 1.5 உரிமையாளர்கள் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அதாவது இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டால் பயனர்கள் வைத்து இருக்கும் ஸ்கூட்டரின் அடுத்த மாடல் வந்தால் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி புதிய மாடலை வாங்கி கொள்ளலாம்.

அதன்படி, எக்சேஞ்ச் திட்டத்தில் பதிவு செய்த ஏத்தர் 450 Gen 1 மற்றும் Gen 1.5 உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கான பில் வைத்து இருக்க வேண்டும். அதனை பெங்களூரு இந்திரா நகரில் உள்ள ஏத்தர் ஸ்கூட்டர் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை மெக்கானிக் ஆய்வு செய்வர். பின்னர் அதில் காவல்துறை விதிமீறல் அபராதம் இருக்கிறதா என்பதை சார்பார்ப்பார்கள்.

Read More – மனித மூளைக்குள் நியூராலிங்க் சிப்.! மனதில் நினைத்தை அப்படியே செய்யும் கணினி.!

அதன் பின்னர் புதிய எக்சேஞ்ச் ஆபரில் ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு முறைகளை மார்ச் 31, 2024க்குள் முடிக்க வேண்டும். இதன் மூலம், ஏத்தர் 450X மற்றும் 450 அபெக்ஸ் ஆகிய வாகனங்களை எக்சேஞ்ச் ஆஃபரில் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு : ஏத்தர் ஸ்கூட்டர் 36 மாதங்களுக்கு மேல் பழையதாக இருந்தால் அபெக்ஸ் 450க்கு 1.10 லட்சம் கொடுக்க வேண்டும்.  450X 3.7kWh க்கு 90,000 மற்றும் ப்ரோ பேக் உடன் 450X 2.9kWh க்கு ரூ.80,000. என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதங்கள் குறையும் போது எக்சேஞ்ச் விலை மேலும் குறையும் என கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

51 minutes ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

1 hour ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

2 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

2 hours ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

2 hours ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

3 hours ago