க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் பெற்று அசத்திய டாடா நெக்ஸான்!!!

Default Image

குளோபல் என்சிஏபி ஆனது, டாடா நெக்ஸான் எஸ்யுவியை ஆகஸ்ட் மாதம் க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இதில் 4 ஸ்டார்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான காராக பெயர் பெற்றது.
இதனை தொடர்ந்து, தற்போது அந்த மாடலில் சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. பிறகு பக்கவாட்டு க்ராஷ் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது.  ஆகஸ்டில் நடைபெற்ற க்னாஸ் டெஸ்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கு வழங்கப்படும் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 13.56 புள்ளிகளை பெற்றிருந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி இம்முறை 16.06 புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளது.
டாடா நெக்ஸான் எஸ்யூவியி் எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் முதல் எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது. எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவில் அதிக பாதுகாப்பான கார் இதுதான் என நம்பப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்