இழப்புகளை தாண்டி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா… ஆறுதல் கூறும் சக போட்டியாளர்கள்!

தந்தையின் இழப்புக்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழைப்புக்கிணங்கி வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களின் ஒருவராகிய அனிதா இன்று வீட்டுக்குள் வந்துள்ள நிலையில், சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். 

கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் நேற்றும் இன்றும் வெளியேறிய போட்டியாளர்கள் மணீண்டும் பார்வைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றே சனம், ரேக்கா, அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ஆஜீத், சம்யுக்தா, வேல்முருகன் என அனைவரும் வந்திருந்தனர்.

சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா தான் வரவில்லை. அனிதா தந்தையின் இழப்பு காரணமாக வரவில்லை போல என பேசப்பட்ட நிலையில், தற்பொழுது அனிதா இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். வெளியில் அனிதா தந்தை இழப்பை அறிந்த மற்ற போட்டியாளர்கள் அனிதாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal