எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வருமா? பிரபலத்திடம் ஏங்கிய அஜித்குமார்!

Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார்.

நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அஜித்குமார் தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருவார்களா? என ஏங்கினாராம். அமராவதி பட சமயத்தில் தலைவாசல் விஜயிடம் தான் நானும் ஒரு பெரிய நடிகராக வேண்டும் எனக்கும் ரசிகர்கள் கூட்டம் வரவேண்டும் என் அஜித் கூறினாராம்.

தலைவாசல் விஜய் அந்த சமயம் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவருடைய பெயர் நன்றாக வெளிய தெரிந்ததாம். ஆனால், அஜித் அப்போது தான் அமராவதி படத்தில் நடித்து முடித்து இருந்தார். எனவே, அஜித்தை அந்த சமயம் பலருக்கும் தெரியாதாம்.

அமராவதி படத்தில் நடித்து முடித்துவிட்டு படத்தை பார்க்க தலைவாசல் விஜயுடன் இணைந்து அஜித் அமராவதி படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றாராம். படத்தை பார்த்துவிட்டு வெளிய வந்தவுடன் தலைவாசல் விஜய் பார்த்து பலரும் நீங்க தானே தலைவாசல் படத்தில் நடித்தது என்று கேட்டு பேசினார்களாம். இதனை பார்த்த அஜித் நம்மளை யாருக்கும் தெரியவில்லை என்று வருத்தப்பட்டாராம்.

தலைவாசல் விஜையிடம் அவர்கள் எல்லாம் பேசிவிட்டு சென்ற பிறகு அஜித் எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வந்து பேசுவார்களா கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆசைபட்டாராம். உடனடியாக தலைவாசல் விஜய் கவலை படாதே நீ பெரிய ஹீரோவாக வருவாய் அதற்கான எல்லா தகுதியும் உன்னிடம் இருக்கிறது என்று கூறினாராம். இந்த தகவலை தலைவாசல் விஜயே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.