நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பாலனின் மேலாளர் அதிதி சந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66(சி) கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 வயது பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகர்.!
கேரளாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மலையாள வினிமாவில் நடிக்க தொடங்கி தற்பொழுது, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும், இவர் தமிழில் நடிகர் அஜித் குமாருடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.